follow the truth

follow the truth

April, 29, 2025
Homeஉள்நாடுமத்ரஸா மாணவனின் மரணம் : 'கழுத்து நெரிபட்டதால் உயிரிழப்பு'

மத்ரஸா மாணவனின் மரணம் : ‘கழுத்து நெரிபட்டதால் உயிரிழப்பு’

Published on

சாய்ந்தமருது பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் அமைந்துள்ள கட்டடம் ஒன்றில் நடாத்தப்படும் குர்ஆன் மத்ரஸாவில் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்ட மாணவனின் பிரேத பரிசோதனை அறிக்கை வெளியாகியுள்ளது.

அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது சந்தை வீதியில் அமைந்துள்ள மத்ரஸா ஒன்றில் கடந்த 05ஆம் திகதி இரவு மட்டக்களப்பு மாவட்டம் காத்தான்குடி பகுதியை சேர்ந்த எம்.எஸ். முஷ்அப் (வயது-13) எனும் மாணவன் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.

மர்மமான முறையில் உயிரிழந்த மாணவனின் சடலம் பிரேத பரிசோதனைக்காக அம்பாறை பொது வைத்தியசாலைக்கு எடுத்து செல்லப்பட்டு பிரேத பரிசோதனை சட்ட வைத்தியரினால் மேற்கொள்ளப்பட்டது.

அதில் குறித்த மாணவனின் கழுத்து நெரிபட்டதால் உயிரிழந்துள்ளதாக சட்ட வைத்தியர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் உயிரிழந்த மாணவன் குறித்து மத்ரஸாவில் இருந்து கிடைக்கப்பெற்ற தடயப்பொருட்களைக் கொண்டு பார்க்கும் பொழுது இது கொலையாக இருக்கலாம் என சாய்ந்தமருது பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளதோடு குறித்த மரணம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

இந்நிலையில், அம்பாறை வைத்தியசாலையில் குறித்த மாணவனின் பிரேத பரிசோதனை முடிவடைந்து ஜனாஸா காத்தான்குடிக்கு கொண்டு செல்லப்படவுள்ளது.

ஜனாஸா நல்லடக்கம் இன்று (07) மஹ்ரிப் தொழுகையை தொடர்ந்து மெத்தைப் பள்ளிவாயலில் நடைபெற்று அதே மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா தேர்தல் ஆணைக்குழுவில் முறைப்பாடு

தனது பெயர் மற்றும் புகைப்படத்தை சட்டவிரோதமாக பயன்படுத்துவதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தேர்தல் ஆணைக்குழுவில் முறைப்பாடு...

இலஞ்சம், ஊழல் விசாரணை ஆணைக்குழுவிலிருந்து வெளியேறினார் ரணில்

வாக்குமூலம் வழங்குவதற்காக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகியிருந்த முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சற்றுமுன்னர் அங்கிருந்து வௌியேறியுள்ளார். நாடாளுமன்ற...

உயர்நீதிமன்றில் சாட்சியமளித்த மைத்திரி

2008 ஆம் ஆண்டு பொரலஸ்கமுவ பகுதியில் நடந்த தற்கொலை குண்டுவெடிப்பு தாக்குதல் தொடர்பான வழக்கில் சாட்சியாகப் பெயரிடப்பட்ட முன்னாள்...