follow the truth

follow the truth

September, 8, 2024
HomeTOP1ஞானசார தேரருக்கு எதிரான வழக்கை மார்ச் 11 விசாரணைக்கு

ஞானசார தேரருக்கு எதிரான வழக்கை மார்ச் 11 விசாரணைக்கு

Published on

குர்ஆனையும் இஸ்லாத்தையும் இழிவுபடுத்தும் வகையில் பொய்யான அறிக்கைகளை ஊடகங்களுக்கு வழங்கியதாக பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை எதிர்வரும் மார்ச் மாதம் 11 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளுமாறு கோட்டை நீதவான் திலின கமகே இன்று (04) உத்தரவிட்டுள்ளார்.

2014 ஆம் ஆண்டு கொழும்பு ஹோட்டலில் தேசிய படை அமைப்பினால் நடாத்தப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பின் போதே கலகொட அத்தே ஞானசார தேரர் இதனைத் தெரிவித்திருந்தார்.

அது தொடர்பிலான வழக்கு, விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது ​​இன்று நீதிமன்றத்தில் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள கலகொட அத்தே ஞானசார தேரர் முன்னிலையாகியிருந்தாக எமது செய்தியாளர் தெரிவித்திருந்தார்.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

செப்டம்பர் 05 நாட்களில் மாத்திரம் 21,073 சுற்றுலாப் பயணிகள் வருகை

செப்டம்பர் மாதத்தின் கடந்த ஐந்து நாட்களில் மாத்திரம் 21,073 பேர் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார...

இலங்கைக்கான விசா கட்டுப்பாடுகளை நீக்கிய தன்சானியா

20 ஆண்டுகளுக்கும் மேலாக விதிக்கப்பட்டிருந்த இலங்கைக்கான விசா கட்டுப்பாடுகளை தன்சானியா நீக்க தீர்மானித்துள்ளது. தன்சானியாவின் விசா பரிந்துரை பட்டியலில் இலங்கை...

தபால்மூல வாக்குச் சீட்டின் புகைப்படத்தை வெளியிட்ட நபர் தொடர்பில் விசாரணை

தபால் மூல வாக்கு சீட்டினை சமூக ஊடகங்களில் வெளியிட்டதாகக் கூறப்படும் சந்தேக நபரை விசாரணை செய்யுமாறு தேர்தல்கள் ஆணைக்குழு...