நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையால் இயற்கை அனர்த்தங்களில் சிக்குண்டு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 15ஆக அதிகரித்துள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவிக்கின்றது.
நாட்டில் சீரற்ற காலநிலை காரணமாக 17 மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
7529 குடும்பங்களைச் சேர்ந்த 28,263 பேர் இயற்கை அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவிக்கின்றது.