follow the truth

follow the truth

March, 16, 2025
Homeஉலகம்கடல் நீரில் நின்று உரையாற்றிய துவாலு அமைச்சர்

கடல் நீரில் நின்று உரையாற்றிய துவாலு அமைச்சர்

Published on

இங்கிலாந்தின் கிளாஸ்கோ நகரில் நடந்த ஐக்கிய நாடுகளின் காலநிலை மாநாட்டில் பசிபிக் பெருங்கடலின் தீவு நாடான துவாலுவின் (Tuvalu) வெளியுறவு துறை அமைச்சர் சைமன் கோஃப். காலநிலை மாற்றத்தால் தங்கள் நாடு எதிர்கொண்டு வரும் சூழலை உலகத்திற்கு எடுத்து சொல்லும் விதமாக முழங்கால் அளவு ஆழம் கொண்ட கடல் நீரில் நின்றபடி பேசி தனது வீடியோவை இந்த மாநாட்டில் பகிர்ந்துள்ளார்.

இதன் மூலம் தங்கள் நாடு காலநிலை மாற்றத்தை எதிர்கொண்டு வரும் முதன்மையான நாடுகளில் ஒன்றாக இருப்பதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இங்கிலாந்தின் கிளாஸ்கோ நகரில் ஐக்கிய நாடுகள் அவையின் காலநிலை மாற்றம் தொடர்பான மாநாடு கடந்த அக்டோபர் 31 முதல் நடைபெற்று வருகிறது. சுமார் 200 நாடுகளில் 24,000இற்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் இந்த மாநாட்டில் கலந்து கொண்டுள்ளனர்.

 

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கனடாவின் நீதி அமைச்சராக பதவியேற்ற இலங்கையர்

யாழ்ப்பாணத்தில் பிறந்த கரி ஆனந்தசங்கரி கனடாவின் நீதி அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். கனடாவின் 24 ஆவது பிரதமராக மார்க் கார்னி நேற்று...

41 நாடுகளைச் சேர்ந்தவர்கள் அமெரிக்காவுக்கு பயணிக்க தடை?

அமெரிக்காவில் டொனால்ட் டிரம்ப் நிர்வாகம் சட்டவிரோத குடியேற்றத்தைத் தடுப்பதில் கடுமையாக செயல்பட்டு வருகின்ற தற்போது 41 நாடுகளை சேர்ந்தவர்கள்...

‘ரயில் கடத்தலுக்கு பின்னால் இந்தியாவின் சதி’ – பாகிஸ்தான் குற்றச்சாட்டு

பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் பெஷாவர் செல்லும் பயணிகள் ரயில் கடந்த மார்ச் 11 கடத்தப்பட்டது. 400க்கும் மேற்பட்ட பயணிகளை, பெரும்பாலும்...