follow the truth

follow the truth

September, 20, 2024
Homeஉலகம்கடல் நீரில் நின்று உரையாற்றிய துவாலு அமைச்சர்

கடல் நீரில் நின்று உரையாற்றிய துவாலு அமைச்சர்

Published on

இங்கிலாந்தின் கிளாஸ்கோ நகரில் நடந்த ஐக்கிய நாடுகளின் காலநிலை மாநாட்டில் பசிபிக் பெருங்கடலின் தீவு நாடான துவாலுவின் (Tuvalu) வெளியுறவு துறை அமைச்சர் சைமன் கோஃப். காலநிலை மாற்றத்தால் தங்கள் நாடு எதிர்கொண்டு வரும் சூழலை உலகத்திற்கு எடுத்து சொல்லும் விதமாக முழங்கால் அளவு ஆழம் கொண்ட கடல் நீரில் நின்றபடி பேசி தனது வீடியோவை இந்த மாநாட்டில் பகிர்ந்துள்ளார்.

இதன் மூலம் தங்கள் நாடு காலநிலை மாற்றத்தை எதிர்கொண்டு வரும் முதன்மையான நாடுகளில் ஒன்றாக இருப்பதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இங்கிலாந்தின் கிளாஸ்கோ நகரில் ஐக்கிய நாடுகள் அவையின் காலநிலை மாற்றம் தொடர்பான மாநாடு கடந்த அக்டோபர் 31 முதல் நடைபெற்று வருகிறது. சுமார் 200 நாடுகளில் 24,000இற்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் இந்த மாநாட்டில் கலந்து கொண்டுள்ளனர்.

 

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கனடாவில் வெளிநாட்டு மாணவர்களுக்கு விசா கட்டுப்பாடு

வெளிநாட்டு தொழிலாளர்களின் எண்ணிக்கைகள் குறைக்கப்படும் என்று கனடா பிரதமர் ட்ரூடோ அறிவித்தார். உள்ளூர் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை அதிகரிக்க இந்த நடவடிக்கை...

தேர்தலை நடத்தக் கோரி பங்களாதேஷில் ஆர்ப்பாட்டம்

ஜனநாய ரீதியிலான அரசியல் பரிமாற்றம் ஒன்றைக் கோரி பங்களாதேஷ் தலைநகர் டாக்காவில் ஆயிரக்கணக்கான செயற்பாட்டாளர்கள் மற்றும் எதிர்க்கட்சியான பங்களாதேஷ்...

சிம்பாப்வேயில் கடும் வறட்சி – 200 யானைகளை கொன்று மக்களுக்கு உணவளிக்க திட்டம்

கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத வகையில் வாட்டி வதைத்து வரும் கடும் வறட்சி காரணமாக ஆபிரிக்க நாடான சிம்பாப்வேயில்...