follow the truth

follow the truth

September, 8, 2024
HomeTOP1"சாதாரண தரப் பரீட்சையின் 52 விடைத்தாள்கள் குப்பைக் குவியலில்"

“சாதாரண தரப் பரீட்சையின் 52 விடைத்தாள்கள் குப்பைக் குவியலில்”

Published on

இந்த ஆண்டுக்கான கல்விப் பொதுத் தர சாதாரண தரப் பரீட்சையின் 52 விடைத்தாள்கள் குப்பைக் குவியலில் இருந்து பரீட்சை திணைக்கள அதிகாரிகளால் கண்டுபிடிக்கப்பட்டதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இந்த விடைத்தாள்கள் ஒரு பேப்பர் பார்சலில் போடப்பட்டு, விடைத்தாள்கள் மதிப்பீட்டின் முடிவில் தூக்கி எறியப்பட்டு குப்பையாக வீசப்படுவதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.

மேலும், பரீட்சை மீதான பொதுமக்களின் நம்பிக்கையை சீர்குலைக்கும் இந்த சம்பவத்தில் தொடர்புடைய அனைத்து அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

பரீட்சை திணைக்களம் வெளிப்படையான விசாரணையை மேற்கொள்ள வேண்டும் எனவும், இவ்வாறான சம்பவங்களை தவறு எனக் கருதி நிராகரிக்கக் கூடாது எனவும் அவர் தெரிவித்துள்ளார். இந்த விடைத்தாள்கள் தூக்கி எறியப்பட்டதே சாதாரண தர பரீட்சை பெறுபேறுகளின் தாமதத்திற்கு காரணம் என்றும் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

கல்வித்துறையில் அதிகாரிகளின் அலட்சியம் மற்றும் கவனக்குறைவால் பல நெருக்கடிகள் உருவாகி உள்ளதாகவும், தொழிற்சங்கங்கள் தொடர்ந்து இவ்விடயங்களை சுட்டிக்காட்டியும் அதிகாரிகளிடம் இருந்து நல்ல பதில் கிடைக்கவில்லை என்றும் அவர் மேலும் தெரிவிக்கிறார்.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

செப்டம்பர் 05 நாட்களில் மாத்திரம் 21,073 சுற்றுலாப் பயணிகள் வருகை

செப்டம்பர் மாதத்தின் கடந்த ஐந்து நாட்களில் மாத்திரம் 21,073 பேர் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார...

இலங்கைக்கான விசா கட்டுப்பாடுகளை நீக்கிய தன்சானியா

20 ஆண்டுகளுக்கும் மேலாக விதிக்கப்பட்டிருந்த இலங்கைக்கான விசா கட்டுப்பாடுகளை தன்சானியா நீக்க தீர்மானித்துள்ளது. தன்சானியாவின் விசா பரிந்துரை பட்டியலில் இலங்கை...

தபால்மூல வாக்குச் சீட்டின் புகைப்படத்தை வெளியிட்ட நபர் தொடர்பில் விசாரணை

தபால் மூல வாக்கு சீட்டினை சமூக ஊடகங்களில் வெளியிட்டதாகக் கூறப்படும் சந்தேக நபரை விசாரணை செய்யுமாறு தேர்தல்கள் ஆணைக்குழு...