follow the truth

follow the truth

September, 8, 2024
Homeஉள்நாடுபாராளுமன்ற வளாகத்தில் உள்ள பெறுமதிமிக்க கட்டடக்கலையைப் பாதுகாக்க வேலைத்திட்டம்

பாராளுமன்ற வளாகத்தில் உள்ள பெறுமதிமிக்க கட்டடக்கலையைப் பாதுகாக்க வேலைத்திட்டம்

Published on

பாராளுமன்ற வளாகத்தில் உள்ள பெறுமதிமிக்க கட்டடக்கலையைப் பாதுகாக்கும் திட்டம் தொடர்பான ஆரம்ப கட்டக் கலந்துரையாடல் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் பாராளுமன்றத்தில் இடம்பெற்றது.

இலங்கை பாராளுமன்றத்தின் முன்மொழிவுக்கு அமைய இடம்பெறவுள்ள இந்தத் திட்டம் தொடர்பான ஆரம்ப கட்டக் கலந்துரையாடலில் பல நிறுவனங்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

பாராளுமன்ற வளாகத்தில் உள்ள பெறுமதிமிக்க கட்டட வடிவமைப்பில் காணப்படும் கலாசார அடையாளங்கள், இயற்கை நிலக்காட்சி மற்றும் சூழல், வரலாற்று ரீதியாகப் பொருந்தும் சூழல், தேசிய அடையாளம் ஆகியவற்றின் காரணமாக, எதிர்கால சந்ததியினருக்காக அவற்றைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியம் என்பன இங்கு வலியுறுத்தப்பட்டது.

இவற்றை எதிர்கால சந்ததியினருக்கு கலாசார அடையாளமாகப் பாதுகாப்பது, படைப்பாளர்களுக்கு உரிய அங்கீகாரத்தை வழங்குவதுடன், அவர்களின் பதிப்புரிமையை பாதுகாப்பது மற்றும் கட்டடக்கலை, கலைமதிப்பக்கள் அழியாமல் பாதுகாப்பது இதன் நோக்கமாகும்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

செப்டம்பர் 05 நாட்களில் மாத்திரம் 21,073 சுற்றுலாப் பயணிகள் வருகை

செப்டம்பர் மாதத்தின் கடந்த ஐந்து நாட்களில் மாத்திரம் 21,073 பேர் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார...

இலங்கைக்கான விசா கட்டுப்பாடுகளை நீக்கிய தன்சானியா

20 ஆண்டுகளுக்கும் மேலாக விதிக்கப்பட்டிருந்த இலங்கைக்கான விசா கட்டுப்பாடுகளை தன்சானியா நீக்க தீர்மானித்துள்ளது. தன்சானியாவின் விசா பரிந்துரை பட்டியலில் இலங்கை...

தபால்மூல வாக்குச் சீட்டின் புகைப்படத்தை வெளியிட்ட நபர் தொடர்பில் விசாரணை

தபால் மூல வாக்கு சீட்டினை சமூக ஊடகங்களில் வெளியிட்டதாகக் கூறப்படும் சந்தேக நபரை விசாரணை செய்யுமாறு தேர்தல்கள் ஆணைக்குழு...