follow the truth

follow the truth

September, 8, 2024
HomeTOP1ஒரு ஹெக்டேர் காபி பயிர்ச்செய்கைக்கு ஒரு மில்லியன் ரூபா

ஒரு ஹெக்டேர் காபி பயிர்ச்செய்கைக்கு ஒரு மில்லியன் ரூபா

Published on

அடுத்த வருடம் முதல் புதிதாக ஆரம்பிக்கப்படும் ஒரு ஹெக்டேர் காபி பயிர்ச்செய்கைக்கு ஒரு மில்லியன் ரூபாவை வழங்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

விவசாயம் மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சு அடுத்த வருடம் 400 ஹெக்டேர் காபியை நடுவதற்கு தீர்மானித்துள்ளதுடன், இதற்காக ஒதுக்கப்பட்டுள்ள தொகை 400 மில்லியன் ரூபாவாகும்.

இலங்கையில் பிரதான பெருந்தோட்டப் பயிராக காபி பயிரிடப்படாவிட்டாலும், வெளிநாட்டு சந்தையில் காபிக்கான அதிக தேவையை கருத்தில் கொண்டு, காபி செய்கையை மீண்டும் ஒரு பெருந்தோட்டமாக பிரபலப்படுத்தும் நோக்கில் விவசாயம் மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

Coffea Arabica (அரேபிகா காபி), Coffea Canephora (ரோபஸ்டா காபி), Libarica (லைபெரிகா காபி) ஆகியவை இந்த நாட்டில் பயிரிடப்படுகின்றன. அரேபிகா காபி மிகவும் பிரபலமான காபி வகை என்றும், அதன் பயிர்ச்செய்கைக்கு முன்னுரிமை அளிக்கப்படுவதாகவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

செப்டம்பர் 05 நாட்களில் மாத்திரம் 21,073 சுற்றுலாப் பயணிகள் வருகை

செப்டம்பர் மாதத்தின் கடந்த ஐந்து நாட்களில் மாத்திரம் 21,073 பேர் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார...

இலங்கைக்கான விசா கட்டுப்பாடுகளை நீக்கிய தன்சானியா

20 ஆண்டுகளுக்கும் மேலாக விதிக்கப்பட்டிருந்த இலங்கைக்கான விசா கட்டுப்பாடுகளை தன்சானியா நீக்க தீர்மானித்துள்ளது. தன்சானியாவின் விசா பரிந்துரை பட்டியலில் இலங்கை...

தபால்மூல வாக்குச் சீட்டின் புகைப்படத்தை வெளியிட்ட நபர் தொடர்பில் விசாரணை

தபால் மூல வாக்கு சீட்டினை சமூக ஊடகங்களில் வெளியிட்டதாகக் கூறப்படும் சந்தேக நபரை விசாரணை செய்யுமாறு தேர்தல்கள் ஆணைக்குழு...