follow the truth

follow the truth

September, 8, 2024
Homeஉள்நாடுவருடாந்த வருமான அறிக்கை 30க்கு முன்னர் கையளிக்க வேண்டும்

வருடாந்த வருமான அறிக்கை 30க்கு முன்னர் கையளிக்க வேண்டும்

Published on

தற்போதைய உள்நாட்டு இறைவரிச் சட்டத்துக்கு அமைய 2022/2023 மதிப்பீடு ஆண்டுக்கான, அதாவது 2022 ஏப்ரல் 01 முதல் 2023 மார்ச் 31 வரையான காலகட்டத்துக்கான வருடாந்த வருமான அறிக்கையை நவம்பர் மதம் 30 ஆம் திகதிக்கு முன்னர் உள்நாட்டு இறைவரித் திணைக்களத்துக்கு கையளிக்க வேண்டும் என உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் அதிகாரிகள் தெரிவித்தனர்.

அவ்வாறு கையளிக்காத வரி கோவைகளைப் பேணுபவர்களுக்கு 50,000 ரூபாய் தண்டப்பணம் மற்றும் செலுத்தவேண்டிய வரியில் 5 வீதம் தண்டப்படம் விதிக்கப்படும் என மேலும் சுட்டிக்காட்டினர்.

பொருளாதார நெருக்கடியின் தாக்கத்தினைத் தணித்தல் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவினால் ஏற்பாடு செய்யப்பட்ட, வருடாந்த வருமான அறிக்கையை பூர்த்தி செய்தல் மற்றும் ஒன்லைன் (Online) முறையில் உள்நாட்டு இறைவரித் திணைக்களத்துக்கு சமர்ப்பித்தல் தொடர்பான செயலமர்வு உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் வளவாளர்களின் பங்களிப்பில் நேற்று (27) பாராளுமன்றத்தில் இடம்பெற்ற போதே அதிகாரிகள் இதனைத் தெரிவித்தனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

செப்டம்பர் 05 நாட்களில் மாத்திரம் 21,073 சுற்றுலாப் பயணிகள் வருகை

செப்டம்பர் மாதத்தின் கடந்த ஐந்து நாட்களில் மாத்திரம் 21,073 பேர் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார...

இலங்கைக்கான விசா கட்டுப்பாடுகளை நீக்கிய தன்சானியா

20 ஆண்டுகளுக்கும் மேலாக விதிக்கப்பட்டிருந்த இலங்கைக்கான விசா கட்டுப்பாடுகளை தன்சானியா நீக்க தீர்மானித்துள்ளது. தன்சானியாவின் விசா பரிந்துரை பட்டியலில் இலங்கை...

தபால்மூல வாக்குச் சீட்டின் புகைப்படத்தை வெளியிட்ட நபர் தொடர்பில் விசாரணை

தபால் மூல வாக்கு சீட்டினை சமூக ஊடகங்களில் வெளியிட்டதாகக் கூறப்படும் சந்தேக நபரை விசாரணை செய்யுமாறு தேர்தல்கள் ஆணைக்குழு...