follow the truth

follow the truth

February, 11, 2025
HomeTOP1காலி கோட்டைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளிடம் இருந்து பணம் வசூலிக்க எதிர்ப்பு

காலி கோட்டைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளிடம் இருந்து பணம் வசூலிக்க எதிர்ப்பு

Published on

காலி கோட்டைக்கு வருகை தரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளிடம் பணம் அறவிடுவதற்கு அனுமதி வழங்கப்பட மாட்டாது என சுகாதார அமைச்சர் வைத்தியர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார்.

காலி கோட்டை சுதர்மாலய விகாரையில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலில் கலந்து கொண்ட போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

காலி கோட்டைக்குள் பிரவேசிக்கும் சுற்றுலா பயணிகளிடம் இருந்து 15 டொலர்களை வசூலிக்க காலி ஹெரிடேஜ் அறக்கட்டளை தீர்மானித்துள்ளதாக பிரதேசவாசிகள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

இந்த தீர்மானத்திற்கு எதிராக காலி கோட்டை வாசிகள் மற்றும் சுற்றுலாத்துறையில் ஈடுபட்டுள்ள வர்த்தகர்களும் போராட்டங்களை ஏற்பாடு செய்திருந்தனர்.

அதன்படி நேற்று (25) பிற்பகல் சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரன பிரதேசவாசிகள் மற்றும் வர்த்தகர்களுக்கிடையில் விசேட கலந்துரையாடலொன்றை நடத்தியதுடன் இத்தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அனுமதி வழங்கப் போவதில்லை என தெரிவித்தார்.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

அனைத்துப் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் சபாநாயகரிடமிருந்து அறிவிப்பு

பிரதமர் ஹரினி அமரசூரிய அவர்களின் கோரிக்கைக்கு அமைய பாராளுமன்ற நிலையியற் கட்டளை 16ற்கு அமைய 14ஆம் திகதி வெள்ளிக்கிழமை...

உலக அரச உச்சி மாநாட்டுடன் இணைந்ததாக ஜனாதிபதி மற்றும் அரச தலைவர்களுக்கு இடையில் பல சந்திப்புகள்

2025ஆம் ஆண்டு நடைபெறும் உலக அரச உச்சி மாநாட்டில் கலந்துகொள்வதற்காக ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு சென்றுள்ள ஜனாதிபதி அநுர...

குருநாகல் விபத்து- 02 பேருந்துகளின் சேவைகள் இடைநிறுத்தம்

குருநாகல், தொரயாய பகுதியில் விபத்துக்குள்ளான பேருந்துகளின் சேவைகளை இடைநிறுத்துமாறு தேசிய போக்குவரத்து ஆணைக்குழு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாண...