ஆசிரியர் – அதிபர் தொழிற்சங்க போராட்டத்தை வலுப்படுத்தும் வகையில் இன்றைய தினம் நாடு தழுவிய ரீதியில் உள்ள அனைத்து கல்வி வலயங்கள் முன்பாக ஆசிரியர் – அதிபர் ஆகியோர் பிற்பகல் 2 மணியளவில் எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்
இன்றைய தினம் தேசிய எதிர்ப்பு தினமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ள நிலையில் ஆசிரியர்-அதிபர் சேவையில் நிலவும் சம்பள முரண்பாட்டிற்கு தீர்வை கோரி நாடு தழுவிய ரீதியில் உள்ள அனைத்து கல்வி வலயங்கள் முன்பாக ஆசியர்களும், அதிபர்களும் எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுப்படுவார்கள் என ஆசிரியர்-அதிபர் தொழிற்சங்க முன்னணியின் செயலாளர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார்
அத்துடன் கொழும்பு லிப்டன் சுற்றுவட்டத்தின் முன்பாக பிற்பகல் 2 மணியளவில் போராட்டத்தில் ஈடுப்படுவோம். ஆசிரியர்-அதிபர் தொழிற்சங்க போராட்டத்தை பலவந்தமான முறையில் எவராலும் முடக்க முடியாது. நியாயமான தீர்வு கிடைக்கும் வரை தொடர் பேராட்டத்தில் ஈடுப்படுவோம் என ஆசிரியர்-அதிபர் தொழிற்சங்க முன்னணியின் செயலாளர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார்