follow the truth

follow the truth

February, 1, 2025
HomeTOP1பிரமோத்ய விக்கிரமசிங்கவுக்கு திங்களன்றும் அழைப்பு

பிரமோத்ய விக்கிரமசிங்கவுக்கு திங்களன்றும் அழைப்பு

Published on

தேசிய கிரிக்கெட் தெரிவுக் குழுவின் தலைவர் பிரமோத்ய விக்கிரமசிங்கவிடம் இன்று (21) 5 மணிநேர வாக்குமூலம் பதிவு செய்துள்ளதாகவும், எதிர்வரும் திங்கட்கிழமை பிரமோத்ய விக்கிரமசிங்க மீண்டும் அழைக்கப்படுவார் எனவும் விளையாட்டு குற்றங்களைத் தடுப்பதற்கான பொலிஸ் பிரிவின் உயர் அதிகாரி ஒருவர் இன்று பிற்பகல் தெரிவித்தார்.

அந்த 5 மணி நேரத்தில் பிரமோத்ய விக்கிரமசிங்கவின் வாக்குமூலத்தில் நான்கில் ஒரு பங்கைப் பதிவு செய்ததாகக் கூறிய அதிகாரி, பிரமோத்ய விக்கிரமசிங்க சோர்வாக இருந்த காரணத்தினால் மாலை 4.15 மணியளவில் வாக்குமூலப் பதிவு நிறுத்தப்பட்டதாகவும் குறிப்பிட்டார்.

பிரமோத்ய விக்கிரமசிங்க இன்று காலை 11.15 மணியளவில் கொழும்பு சுகததாச விளையாட்டு வளாகத்திற்கு வெளியே உள்ள விளையாட்டு குற்றங்கள் தடுப்பு பொலிஸ் பிரிவுக்கு வருகை தந்தார்.

விளையாட்டு குற்றங்களை தடுக்கும் பொலிஸ் பிரிவின் பணிப்பாளர் உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஜெயநாத் வனசிங்கவின் மேற்பார்வையின் கீழ், அந்த பிரிவின் நிலைய கட்டளைத்தளபதி, பிரதான பொலிஸ் பரிசோதகர் சுபுல் விதானகே தலைமையில் வாக்குமூலம் பெறப்பட்டது.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் நால்வருக்கு இடமாற்றம்

எதிர்வரும் 5 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதிக்கு உட்பட்டு நான்கு...

யோஷிதவிடம் இருந்த 7 துப்பாக்கிகளையும் ஒப்படைத்தார்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மகன் யோஷித ராஜபக்ஷவிடம் இருந்தஅனைத்து உரிமம் பெற்ற  7 துப்பாக்கிகளையும் தற்போது ஒப்படைக்கப்பட்டுள்ளதாக...

U19 உலகக் கிண்ணத் தொடர் – நாளை இறுதி போட்டி

நடப்பு மகளிர் ICC U19 உலகக் கிண்ணத் தொடரின் அரை இறுதி ஆட்டத்தில் இங்கிலாந்தை 9 விக்கெட்டுகளில் வீழ்த்தி...