பிரபல சர்வதேச வலைப்பதிவாளர் ‘நாஸ் டெய்லி’ (Nas Daily) ஸ்தாபகரான Nuseir Yassin இன்று(20) இலங்கையின் சுற்றுலா ஊக்குவிப்பு பணியகத்துடன் (SLTPB) புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டடுள்ளார்.
சுற்றுலா ஊக்குவிப்பு அதிகார சபையின் அழைப்பின் பேரில் அவர் இலங்கை வந்துள்ளார்.
இலங்கையின் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்கு இந்த ஒப்பந்தம் பெரும் உதவியாக இருக்கும் என சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தனது உத்தியோகபூர்வ முகநூல் கணக்கில் பதிவிட்டுள்ளார்.