சபுகஸ்கந்த பிரதேசத்தில் பயணபையிலிருந்து கண்டுப்பிடிக்கப்பட்ட பெண்ணின் சடலத்துடன் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட தம்பதியினர் மஹர மேலதிக நீதவான் முன்னிலையில் இன்று ஆஜர்படுத்தப்பட்டுள்ளனா்.
தம்பதியினர் தடுப்புக் காவலில் வைத்து விசாரணை செய்வதற்கு பொலிஸாருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
சந்தேகநபர்கள் இருவரும் நாளை (07) மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனா்.
மாலிகாவத்தை பிரதேசத்தைச் சேர்ந்த மொஹமட் சாஜி பாதிமா மும்தாஜ் என்றழைக்கப்படும் 44 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு கொலை செய்யபட்டுள்ளாா்.