பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மீது தாக்கல் செய்யப்பட்ட தேச துரோக குற்றச்சாட்டு தொடர்பிலான வழக்கு நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
முன்னாள் பிரதமருக்கு எதிரான வழக்கை நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்தது.
முன்னாள் பிரதமர் மீது தேச துரோக குற்றச்சாட்டின் கீழ் வழக்குத் தொடர மத்திய அரசின் சம்மதத்தைப் பெற குற்றம் சாட்டப்பட்டவர்கள் தவறிவிட்டதாக நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.
ஊழல் குற்றச்சாட்டில் இம்ரான் கான் தற்போது 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்து வருகிறார் மற்றும் 5 ஆண்டுகள் வரை அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட தடை விதிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.