follow the truth

follow the truth

March, 15, 2025
Homeஉள்நாடுதிறந்த பல்கலைக்கழகத்தின் முன் ஆசிரியர்களுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம்

திறந்த பல்கலைக்கழகத்தின் முன் ஆசிரியர்களுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம்

Published on

எதிர்வரும் 9 ஆம் திகதி அனைத்து தொழிற்சங்கங்களையும் ஒன்றிணைத்து நாடு தழுவிய ரீதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்படுவோம் என ஆசிரியர்-அதிபர் சேவை சங்கத்தின் செயலாளர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்தார்.

ஆசிரியர்-அதிபர் தொழிற்சங்க போராட்டத்திற்கு ஆதரவு வழங்கும் வகையில் பல்கலைக்கழக பேராசிரியர் சேவை சங்கத்தினர் இன்று நாவல-திறந்த பல்கலைக்கழகத்தின் முன்பாக போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

சம்பள பிரச்சினையை முன்னிலைப்படுத்தி ஆசிரியர்-அதிபர் தொழிற்சங்கத்தினர் முன்னெத்த தொழிற்சங்க போராட்டம் தற்போது ஏனைய தொழிற்சங்கத்தினரது ஆதரவுடன் பலமடைந்துள்ளதாக சங்கத்தின் செயலாளர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்தார்.

ஆசிரியர் மற்றும் அதிபர்கள் பாடசாலை கடமைக்கு சமுகமளித்துள்ளதுடன்,தொழிற்சங்க போராட்டத்தில் ஈடுபடுகிறார்கள்.

சுபோதினி குழுவின் அறிக்கைக்கு அமைய ஆசிரியர்-அதிபர் சேவையில் சம்பளத்தை அதிகரிக்க வேண்டும். கட்டம் கட்டமான சம்பள அதிகரிப்பை ஏற்றுக் கொள்ள முடியாது.

எதிர்வரும் 12 ஆம் திகதி வரவு- செலவு திட்டம் சமர்ப்பிக்கப்படும் போது நாடு தழுவிய ரீதியில் பாரிய போராட்டத்தை மேற்கொள்வோம் சங்கத்தின் செயலாளர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்தார்.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தேசிய அபிவிருத்தியில் பெண்கள் பிரதிநிதித்துவத்திற்கு அதிக வாய்ப்பு

“இலங்கையின் பொருளாதார மற்றும் சமூக அபிவிருத்தியில் பெண்கள் பெரும் பங்கு வகிக்கின்றனர். இருப்பினும், அவர்களின் பெறுமதியான பங்களிப்பு இருந்தபோதிலும்,...

ஏப்ரலில் இலங்கை வருகிறார் இந்திய பிரதமர்

ஏப்ரல் மாதத்தின் முதல் வாரமளவில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு...

மலையக ரயில் சேவையில் தாமதம்

நானுஓயா ரயில் நிலையத்திற்கு அருகில் ரயில் தடம் புரண்டமையினால் பதுளை மற்றும் கொழும்பு கோட்டைக்கும் இடையிலான மலையக ரயில்...