எதிர்வரும் 9 ஆம் திகதி அனைத்து தொழிற்சங்கங்களையும் ஒன்றிணைத்து நாடு தழுவிய ரீதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்படுவோம் என ஆசிரியர்-அதிபர் சேவை சங்கத்தின் செயலாளர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்தார்.
ஆசிரியர்-அதிபர் தொழிற்சங்க போராட்டத்திற்கு ஆதரவு வழங்கும் வகையில் பல்கலைக்கழக பேராசிரியர் சேவை சங்கத்தினர் இன்று நாவல-திறந்த பல்கலைக்கழகத்தின் முன்பாக போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
சம்பள பிரச்சினையை முன்னிலைப்படுத்தி ஆசிரியர்-அதிபர் தொழிற்சங்கத்தினர் முன்னெத்த தொழிற்சங்க போராட்டம் தற்போது ஏனைய தொழிற்சங்கத்தினரது ஆதரவுடன் பலமடைந்துள்ளதாக சங்கத்தின் செயலாளர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்தார்.
ஆசிரியர் மற்றும் அதிபர்கள் பாடசாலை கடமைக்கு சமுகமளித்துள்ளதுடன்,தொழிற்சங்க போராட்டத்தில் ஈடுபடுகிறார்கள்.
சுபோதினி குழுவின் அறிக்கைக்கு அமைய ஆசிரியர்-அதிபர் சேவையில் சம்பளத்தை அதிகரிக்க வேண்டும். கட்டம் கட்டமான சம்பள அதிகரிப்பை ஏற்றுக் கொள்ள முடியாது.
எதிர்வரும் 12 ஆம் திகதி வரவு- செலவு திட்டம் சமர்ப்பிக்கப்படும் போது நாடு தழுவிய ரீதியில் பாரிய போராட்டத்தை மேற்கொள்வோம் சங்கத்தின் செயலாளர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்தார்.