கவிஞர் அஹ்னாப் ஜசீமின் அடிப்படை உரிமைகள் வழக்கு இன்று (05) எடுத்துக்கொள்ளப்பட்டது இதன்போது புத்தளம் மேல் நீதிமன்றத்தில் சட்டமா அதிபர் ஜசீமுக்கு எதிராக குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளதாகவும்,
நவம்பர் 15 ஆம் திகதி வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்றும் சட்டமா அதிபர் (AG) சார்பில் ஆஜரான அரச சட்டத்தரணி நீதிமன்றத்திற்கு அறிவித்தார் என்று அஹ்னாப் ஜசீமின் சட்டத்தரணி சஞ்சய வில்சன் ஜயசேகர ட்வீட் செய்துள்ளார்.
பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் (PTA) பிரிவு 2(1)(h) இன் கீழ் அஹ்னாஃப் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.