follow the truth

follow the truth

March, 15, 2025
Homeஉலகம்மீண்டும் கொரோனாவின் மையமாக மாறும் ஐரோப்பா

மீண்டும் கொரோனாவின் மையமாக மாறும் ஐரோப்பா

Published on

ஐரோப்பாவில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், ஐரோப்பா கண்டம் மீண்டும் கொரோனாவின் மையமாக மாறியுள்ளதாக உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.

எதிர்வரும் பிப்ரவரி மாதத்துக்குள் மேலும் ஐந்து லட்சம் மரணங்களைச் சந்திக்கலாம் என ஐரோப்பாவுக்கான உலக சுகாதார அமைப்பின் தலைவர் ஹான்ஸ் க்ளூக் தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரிப்புக்கு போதுமான அளவுக்கு தடுப்பூசி செலுத்திக் கொள்ளாததை ஒரு காரணமாக கூறியுள்ளார்.

உலக சுகாதார அமைப்பின் ஐரோப்பிய பிராந்தியத்தில் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரிப்புக்கு பொது சுகாதார தளர்வுகளும் ஒரு காரணமென ஹான்ஸ் குற்றம்சாட்டினார் .

ஐரோப்பாவில் போதுமான கொரோனா தடுப்பூசி விநியோகம் மற்றும் சாதனங்கள் இருந்தும், கடந்த நான்கு வார காலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 55 சதவீதம் அதிகரித்துள்ளது என கொரோனாவுக்கான உலக சுகாதார அமைப்பின் தொழில்நுட்ப தலைவர் மரியா வான் கெர்கோவ் கூறினார்.

“நாம் இப்போதே சரியான நடவடிக்கைகளை எடுக்கவில்லை எனில், இந்த நான்காவது அலை அதிக பாதிப்புகளை ஏற்படுத்தும்” என ஜெர்மனியின் ஆர் கே ஐ இன்ஸ்டிட்டியூட்டைச் சேர்ந்த லோதர் வெய்லர் கூறினார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கனடாவின் நீதி அமைச்சராக பதவியேற்ற இலங்கையர்

யாழ்ப்பாணத்தில் பிறந்த கரி ஆனந்தசங்கரி கனடாவின் நீதி அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். கனடாவின் 24 ஆவது பிரதமராக மார்க் கார்னி நேற்று...

41 நாடுகளைச் சேர்ந்தவர்கள் அமெரிக்காவுக்கு பயணிக்க தடை?

அமெரிக்காவில் டொனால்ட் டிரம்ப் நிர்வாகம் சட்டவிரோத குடியேற்றத்தைத் தடுப்பதில் கடுமையாக செயல்பட்டு வருகின்ற தற்போது 41 நாடுகளை சேர்ந்தவர்கள்...

‘ரயில் கடத்தலுக்கு பின்னால் இந்தியாவின் சதி’ – பாகிஸ்தான் குற்றச்சாட்டு

பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் பெஷாவர் செல்லும் பயணிகள் ரயில் கடந்த மார்ச் 11 கடத்தப்பட்டது. 400க்கும் மேற்பட்ட பயணிகளை, பெரும்பாலும்...