follow the truth

follow the truth

March, 14, 2025
Homeஉள்நாடுவியாபாரிகளே விலைகளைத் தீர்மானிக்கின்றனர் : நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபை என்ற ஒன்று எதற்கு?

வியாபாரிகளே விலைகளைத் தீர்மானிக்கின்றனர் : நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபை என்ற ஒன்று எதற்கு?

Published on

நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபைக்கு வரவு – செலவு திட்டத்தில் நிதி ஒதுக்கப்படக் கூடாது என்றும் அதனை முழுமையாக மூடிவிடுமாறும் வலியுறுத்தி நாளை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளதாக நுகர்வோர் உரிமைகள் தொடர்பான செயற்பாட்டாளர் அசேல சம்பத் தெரிவித்தார்.

நாளை நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபைக்கு முன்னர் சென்று அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளோம். நுகர்வோர் அபிவிருத்தி அதிகாரசபைக்கு வரவு – செலவு திட்டத்தில் நிதி ஒதுக்க வேண்டாம் என்றும் , அதனை மூடுமாறும் வலியுறுத்தி இந்த போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளோம்.

நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபை வர்த்தமானி அறிவித்தல்களை வெளியிடுவதும் பின்னர் இரத்து செய்வதற்கும் மாத்திரமே இருக்கிறது. இதனை செய்து கொண்டு பொது மக்களின் வரிப்பணத்தில் நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபை ஊழியர்களுக்கு ஊதியமளிப்பது பிரயோசனமற்றது.

தற்போது வியாபாரிகளே விலைகளைத் தீர்மானிக்கின்றனர். அவ்வாறெனில் நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபை என்ற ஒன்று எதற்கு? என்றும் அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

புலமைப்பரிசில் பரீட்சை – பாடசாலைகளுக்கான வெட்டுப்புள்ளிகள் வெளியானது

2024 ஆம் ஆண்டு 5 ஆம் வகுப்பு புலமைப்பரிசில் பரீட்சையின் முடிவுகளின் அடிப்படையில் பாடசாலைகளுக்குள் நுழைவதற்கான வெட்டுப்புள்ளிகள் வெளியிடப்பட்டுள்ளன.

கடுகண்ணாவ – பிலிமத்தலாவ வீதிக்கு பூட்டு

கடுகண்ணாவ ரயில் கடவையில் முன்னெடுக்கப்படவுள்ள பராமரிப்புப் பணிகள் காரணமாக நாளை (15) காலை 10.00 மணி முதல் நாளை...

வன உயிரினங்கள் பற்றிய தேசிய கணக்கெடுப்பு நாளை

விவசாயப் பயிர்களுக்கு சேதம் விளைவிக்கும் வன உயிரினங்கள் பற்றிய தேசிய கணக்கெடுப்பு நாளை(15) காலை 8.00 மணி முதல்...