எதிர்வரும் நவம்பர் 9 ஆம் திகதி நாடளாவிய ரீதியில் வைத்தியசாலைகளில் 24 மணிநேர அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தை முன்னெடுக்க சுகாதார நிபுணர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தொழிற்சங்கங்கள் தீர்மானித்துள்ளன.
ஆறு கோரிக்கைகளை முன்வைத்து இந்த தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுப்பதாக சுகாதார அமைச்சின் செயலாளருக்கு நிறைவுகாண் மருத்துவ தொழில் வல்லுநர் ஒன்றியத்தினால் அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பல தடவைகள் தமது கோரிக்கைகள் தொடர்பில் சுகாதார அதிகாரிகளுக்கு தெரியப்படுத்திய போதிலும் இதுவரையில் முறையான கலந்துரையாடலை நடத்தத் தவறியுள்ளதாகவும் அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இதேவேளை அனைத்து தொழிற்சங்கங்களும் ஒன்றிணைந்து எதிர்வரும் 9 ஆம் திகதி பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றை ஏற்பாடு செய்துள்ளதாக இலங்கை ஆசிரியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
அதிபா் , ஆசிரியர்களின் தொழிற்சங்கங்களால் தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் தொழிற்சங்க நடவடிக்கைகள் மேலும் கடுமையாக முன்னெடுக்கப்படும் என்று அந்தச் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளாா்.