follow the truth

follow the truth

September, 19, 2024
Homeவிளையாட்டுவெற்றியுடன் தொடரிலிருந்து விடை பெற்றது இலங்கை அணி

வெற்றியுடன் தொடரிலிருந்து விடை பெற்றது இலங்கை அணி

Published on

2021 உலகக்கிண்ண இருபதுக்கு-20 கிரிக்கெட் தொடரின் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான இன்றையப்போட்டியில் 20 ஓட்டங்களால் இலங்கை அணி வெற்றி பெற்றுள்ளது.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற மேற்கிந்திய தீவுகள் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.

அதன்படி முதலில் துடுப்பாடிய இலங்கை அணி 20 ஓவர்கள் நிறைவில் 3 விக்கெட்டுக்களை இழந்து 189 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

இந்நிலையில் 190 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுக்களை இழந்து 169 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியைத் தழுவியது.

இலங்கை அணிக்காக 41 பந்துகளில் 68 ஓட்டங்களைப் பெற்றுக் கொடுத்த சரித் அசலங்க போட்டியின் ஆட்டநாயகனாகத் தெரிவானார்.

இம்முறை உலகக் கிண்ண இருபதுக்கு-20 கிரிக்கெட் தொடரில் இலங்கை அணி சூப்பர் 12 சுற்றிலிருந்து அரையிறுதிக்கு தகுதி பெற தவறியுள்ளது.

இந்தநிலையில் இன்று தாம் பங்குபற்றிய இறுதி போட்டியில் கிடைத்த வெற்றியுடன் தொடரிலிருந்து விடை பெற்றது இலங்கை அணி.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

உலகின் முதல் E-விளையாட்டுக்களுக்கான உலகக் கிண்ணப் போட்டிகள் வெற்றிகரமாக நிறைவு

கடந்த சில நாட்களாக சவூதி அரேபியாவின் ரியாத் நகரில் நடைபெற்று வந்த உலகின் முதல் E-விளையாட்டுக்களுக்கான உலகக் கிண்ணப்...

கமிந்து இலங்கை இன்னிங்ஸை காப்பாற்றினார்

இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டியின் முதல் நாள் ஆட்டநேர முடிவில், துடுப்பெடுத்தாடிய...

மதிய உணவு இடைவேளையின் போது இலங்கை 2 விக்கெட் இழப்புக்கு 88 ஓட்டங்கள்

காலி சர்வதேச மைதானத்தில் நடைபெற்று வரும் நியூசிலாந்து அணியுடனான முதலாவது டெஸ்ட் போட்டியில் நாணய சுழற்சியில் வென்று முதலில்...