சிகரெட் விலை சூத்திரத்தின் பிரகாரம் அடுத்த வரவு – செலவுத் திட்டத்தில் சிகரெட் விலை அதிகரிக்கலாம் என புகையிலை மற்றும் மதுபானம் தொடர்பான ஆணைக்குழுவின் தலைவர் வைத்தியா் சமாதி ராஜபக்ஷ தெரிவித்துள்ளாா்.
கொழும்பில் இன்று(04) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.
சிகரெட் விலையை தீர்மானிப்பதற்காக விஞ்ஞான பூர்வமான முறையில் விலை சூத்திரதை்தை முன்வைத்துள்ளோம். அடுத்த வரவு செலவுத் திட்டத்தில் சிகரெட்டுக்கான விலையும் அதிகரிக்குமென நாங்கள் எதிர்பார்க்கிறோம் என தெரிவித்துள்ளார்.