follow the truth

follow the truth

September, 20, 2024
HomeTOP1ரூ.74 இலட்சத்திற்கு மரங்களைச் பரிசோதிக்க கொள்வனவு செய்த இயந்திரம் பாவனையின்மையால் சேதம்

ரூ.74 இலட்சத்திற்கு மரங்களைச் பரிசோதிக்க கொள்வனவு செய்த இயந்திரம் பாவனையின்மையால் சேதம்

Published on

கொழும்பு மாநகர சபையில் உள்ள மரங்களை பரிசோதிப்பதற்காக 2015 ஆம் ஆண்டு 74 இலட்சம் ரூபா செலவில் கொள்வனவு செய்யப்பட்ட Tree Scanner பாவனையின்மையால் சேதமடைந்துள்ளதாக கொழும்பு மாநகர சபை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த இயந்திரங்கள் மரத்தின் கட்டமைப்பை சரிபார்த்து, மரங்களின் ஆயுட்காலம் மற்றும் அவற்றின் தன்மையை சரிபார்த்தாலும், இயந்திரத்திலிருந்து பெறப்பட்ட தரவுகளை பகுப்பாய்வு செய்து முடிவெடுக்கும் அதிகாரி இல்லாததால், அது பயன்படுத்தப்படாமல் சிதைந்து வருகிறது.

கொள்ளுப்பிட்டியில் நேற்று (06) பேரூந்து மீது மரம் முறிந்து விழுந்ததில் 5 பேர் உயிரிழந்துள்ளதுடன், மனித நடமாட்டம் மற்றும் மழை காரணமாக மரம் சரிந்து விழுந்துள்ளதாக விசாரணைகளில் இருந்து உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

Whatsapp Channel : https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

“கஞ்சிபானியின் பெயரே KPI என எழுதப்பட்டது”

அதுருகிரியவில் உள்ள பச்சை குத்தும் நிலையத்தில் சுரேந்திர வசந்த பெரேரா அல்லது கிளப் வசந்த உள்ளிட்ட இருவரை கொல்ல...

தெஹிவளையில் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் பலி

தெஹிவளை பகுதியில் இன்று (20) காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் உயிரிழந்துள்ளார். தெஹிவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கடவத்த...

அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவின் பெயரில் போலிச் செய்தி. மக்களே அவதானம்.

அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபை ஒரு அரசியல் நிலைப்பாட்டில் இருப்பதாக எங்கள் லோகோ, எங்கள் சமூக வலைதளன...