சீரற்ற காலநிலை காரணமாக எல்லயிலிருந்து நமுணுகல வழியாக பசறை செல்லும் வீதி முழுமையாக மூடப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
கடும் மழை காரணமாக பசறை – நமுணுகல பகுதியில் மரங்கள் மற்றும் கற்பாறைகள் சரிந்து வீழ்ந்துள்ளதால் குறித்த வீதியூடான போக்குவரத்து முழுமையாகத் தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
எனவே, சாரதிகள் பசறை – பதுளை பிரதான வீதியைப் பயன்படுத்துமாறு கோரப்பட்டுள்ளனர்.