புகையிரத சேவையாளர்களின் பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக நாளை (5) காலை சில அலுவலக புகையிரதங்கள் இரத்து செய்யப்படலாம் அல்லது தாமதமாக புறப்படலாம் என புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.
புகையிரத கட்டுப்பாட்டாளர்களால் இன்று முதல் ஆரம்பிக்கப்பட்ட பணிப்புறக்கணிப்பு காரணமாக இன்று பல ரயில் பயணங்கள் தாமதமாகச் செல்ல வேண்டியிருந்ததுடன், 20க்கும் மேற்பட்ட ரயில் பயணங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.