follow the truth

follow the truth

March, 19, 2025
HomeTOP1பாகிஸ்தான் பள்ளி அருகே குண்டு வெடிப்பு - இதுவரை 52 பேர் பலி

பாகிஸ்தான் பள்ளி அருகே குண்டு வெடிப்பு – இதுவரை 52 பேர் பலி

Published on

பாகிஸ்தானின் பலுசிஸ்தான் (Balochistan) மாகாணத்தில் முஹம்மது நபியின் பிறந்தநாளைக் கொண்டாடும் ஊர்வலத்தில் தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை 52 ஆக உயர்ந்துள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் மற்றும் ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பலுசிஸ்தானின் மஸ்துங் மாவட்டத்தில் உள்ள ஒரு பள்ளி அருகே வெள்ளிக்கிழமை சக்திவாய்ந்த வெடிகுண்டு வெடித்தது, குறைந்தது 50 பேர் காயமடைந்தனர், இதில் பலர் ஆபத்தான நிலையில் உள்ளனர் என்று ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

“இது ஒரு தற்கொலைத் தாக்குதலாகத் தெரிகிறது” என்று மூத்த உள்ளூர் காவல்துறை அதிகாரி ஜாவேத் லெஹ்ரி கூறினார், துணைக் கண்காணிப்பாளர் நவாஸ் கிஷ்கோரியின் வாகனத்தின் அருகே குண்டுதாரி தன்னைத்தானே வெடிக்கச் செய்து கொண்டுள்ளார்.

பலுசிஸ்தானில் “பயங்கரவாதிகளால்” நடத்தப்பட்ட குண்டுவெடிப்பை அந்நாட்டின் உள்துறை அமைச்சகம் உறுதிப்படுத்தியது.

“மிலாத்-உன்-நபி பெருநாள் ஊர்வலத்தில் பங்கேற்க வந்த அப்பாவி மக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது மிகவும் கேவலமான செயல்,” என்று அது நபியின் பிறந்தநாளைக் குறிப்பிட்டு ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த குழுவும் பொறுப்பேற்கவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தேசபந்து தென்னகோன் விளக்கமறியலில்

முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் நாளை (20) வரையில் விளக்கமறியல் வைக்க மாத்தறை நீதவான் நீதிமன்றம்...

ரணிலின் குடியுரிமையை இரத்து செய்யுமாறு கோரிக்கை

1988-89 பயங்கரவாத காலத்தில் காணாமல் போனவர்களின் உறவினர்கள் குழு ஒன்று, சர்ச்சைக்குரிய படலந்த சம்பவம் குறித்து விசாரிக்க புதிய...

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவுக்கு நாடாளுமன்றில் தடை விதிப்பு

எதிர்வரும் 8 அமர்வு நாட்களில் நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவினால் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படும், கருத்துகள் மற்றும் உரைகளை நேரடியாக...