தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபையின் (NMRA) தரவுத் தளத்தில் உள்ள தரவுகளை நீக்கிய குற்றச்சாட்டில் கைதான எபிக் லங்கா டெக்னொலஜி தனியார் நிறுவனத்தின் மென் பொறியியலாளருக்கான விளக்கமறியல் உத்தரவு நீடிக்கப்பட்டுள்ளது.
அதன்படி குறித்த சந்தேக நபரை எதிர்வரும் நவம்பர் 16 வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதிவான் புத்திக ஸ்ரீ ராகலவினால் இன்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.