follow the truth

follow the truth

September, 24, 2024
Homeஉள்நாடுசீனியின் விலை 12 ரூபாவினால் உயரும் - நிஹால் செனவிரத்ன

சீனியின் விலை 12 ரூபாவினால் உயரும் – நிஹால் செனவிரத்ன

Published on

அத்தியாவசிய பொருட்கள் இறக்குமதிக்காக தேவையான டொலர் இல்லாத காரணத்தினால் சீனி, பருப்பு, உப்பு, கிழங்கு உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்களின் இறக்குமதியை நிறுத்தியுள்ளதாக அத்தியாவசிய உணவு இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக எதிர்வரும் காலங்களில் இறக்குமதி செய்யப்படும் அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கு ஏற்படவுள்ள தட்டுப்பாடு மற்றும் விலை அதிகரிப்பை யாராலும் தடுத்து நிறுத்த முடியாமல் போகுமெனவும் அந்த சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் நிஹால் செனவிரத்ன தெரிவித்தார்.

தற்போது டொலர் இல்லாத காரணத்தினால் 10 நாட்களாக துறைமுகத்தில் உள்ள 200 சீனி கொள்கலன்களை விடுவிக்க முடியாமல் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

தற்போது துறைமுகத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கொள்கலன்களுக்காக அந்நிறுவனத்திற்கு நாளாந்தம் தாமதக் கட்டணமாக 20 தொடக்கம் 35 டொலர் வரை செலுத்தவேண்டியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதனால் தற்போதைய விலையை விட 12 ரூபாவினால் சீனியின் விலை உயரும் எனவும் அவர் தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கையிருப்பிலுள்ள எரிபொருள் குறித்து காஞ்சனா விஜேசேகர அறிவிப்பு

நாட்டில் உள்ள எரிபொருள் இருப்புக்கள் தொடர்பில் முன்னாள் மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர விளக்கமளித்துள்ளார். அவரது அதிகாரப்பூர்வ...

ஜனாதிபதியின் பிரத்தியேக செயலாளராக ஆனந்த விஜயபால நியமனம்

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவின் தனிப்பட்ட செயலாளராக கே. ஆனந்த விஜயபால நியமிக்கப்பட்டுள்ளார். அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில்...

பங்குச் சந்தை விலைக் குறியீடு உயர்ந்துள்ளது

ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்ட ஒரு நாளின் பின்னர், கொழும்பு பங்குச் சந்தையின் (CSE) அனைத்து பங்கு விலைச் சுட்டெண்...