ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கியூபாவிலிருந்து இன்று அதிகாலை அமெரிக்காவின் நியூயோர்க் நகரை சென்றடைந்ததாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
எதிர்வரும் 19ஆம் திகதி முதல் 21ஆம் திகதி வரை நியூயோர்க்கில் இடம்பெறவுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் 78 ஆவது பொதுச் சபை கூட்டத்தில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அமெரிக்கா சென்றுள்ளார்.