follow the truth

follow the truth

March, 18, 2025
HomeTOP1அரச புலனாய்வுத் தலைவர் முறைப்பாட்டினால் சேனல் 4 காணொளி தொடர்பில் விசாரணை

அரச புலனாய்வுத் தலைவர் முறைப்பாட்டினால் சேனல் 4 காணொளி தொடர்பில் விசாரணை

Published on

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான சேனல் 4 காணொளி தொடர்பில் அரச புலனாய்வுப் பிரிவின் தலைவர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலாய் செய்த முறைப்பாட்டின் பிரகாரம், பிரித்தானிய இலத்திரனியல் ஊடக ஒழுங்குமுறை அலுவலகம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

செப்டம்பர் 5 ஆம் திகதி இரவு 11.05 மணிக்கு சர்ச்சைக்குரிய வீடியோவை சேனல் 4 வெளியிட்டது, அதில் அரச புலனாய்வுத் துறையின் தலைவர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலையும் குற்றம் சாட்டப்பட்டிருந்தார்.

இதற்கு முன்னர் ஆதாரங்களுடன் முறையான பதில்களை வழங்கியிருந்த போதிலும், தன்னை சங்கடப்படுத்தும் வகையில் சேனல் 04 இந்த காணொளியை வேண்டுமென்றே ஒளிபரப்பியுள்ளதாக பிரித்தானிய இலத்திரனியல் ஊடக ஒழுங்குமுறை அலுவலகத்திற்கு சுரேஷ் சாலை தெரிவித்துள்ளார்.

இதன்படி, குறித்த காணொளி தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பிரித்தானிய இலத்திரனியல் ஊடக ஒழுங்குமுறை அலுவலகம் தெரிவித்ததாக அரச புலனாய்வுப் பிரிவின் தலைவர் சுரேஷ் சாலையின் சட்டத்தரணி பசன் வீரசிங்க தெரிவித்தார். இந்த திட்டத்தை முற்றாக நிராகரிப்பதாக அரசாங்கம் அறிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலங்கையில் கடற்றொழில்துறை நவீன மயப்படுத்தப்படும்

இலங்கையில் கடற்றொழில்துறை நவீன மயப்படுத்தப்படும் எனவும், ஆழ்கடல் மீன்பிடி நடவடிக்கை ஊக்குவிக்கப்படும் எனவும் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள்...

எதிர்வரும் சில வருடங்களில் கண்டியை அபிவிருத்தி செய்ய நடவடிக்கை

சுற்றுலாத் துறையை மையப்படுத்தி எதிர்வரும் சில வருடங்களில் கண்டி நகரை அபிவிருத்தி செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று சுற்றுலாத்...

இஸ்லாமிய பாட நூல்களை நாட்டுக்குக் கொண்டுவருவதற்கான தடையை நீக்க வேண்டும் – ஹிஸ்புல்லா கோரிக்கை

மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லா இன்றைய குழுநிலை விவாதத்தில் கலந்து கொண்டு அரசாங்கத்திடம் பல்வேறு கோரிக்கைகளை...