follow the truth

follow the truth

March, 19, 2025
HomeTOP1கட்சி நெருக்கடி குறித்து கலந்துரையாட ஸ்ரீலங்கா சுகந்திரக் கட்சியின் குழு கூடுகிறது

கட்சி நெருக்கடி குறித்து கலந்துரையாட ஸ்ரீலங்கா சுகந்திரக் கட்சியின் குழு கூடுகிறது

Published on

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குள் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை மற்றும் கட்சியின் எதிர்கால செயற்பாடுகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக இன்று (11) மத்திய குழு ஒன்று கூடவுள்ளது.

கட்சியின் செயலாளர் நாயகம் பதவியில் இருந்து தயாசிறி ஜயசேகர நீக்கப்பட்டதையடுத்து, கட்சியில் நெருக்கடியான சூழல் உருவாகியுள்ளதோடு, இது தொடர்பான பிரச்சினைகளுக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வுகாண வேண்டும் என கட்சி உறுப்பினர்கள் பலரும் கருத்து வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எதிர்வரும் தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் தொகுதிகள் மற்றும் மாவட்ட சபைகளை வலுப்படுத்தும் வகையில் அடிமட்ட மட்டத்தில் வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதுடன், இன்று நடைபெறும் மத்திய குழுவில் இது குறித்தும் கலந்துரையாடப்பட உள்ளது.

இதற்கு மேலதிகமாக எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி முன்னணிக் கூட்டணி அல்லது முன்னணியின் வேட்பாளரை முன்வைக்க வேண்டும் என கட்சிக்குள் கலந்துரையாடல்கள் ஆரம்பித்துள்ளதாகவும், அது தொடர்பில் இன்று கலந்துரையாடப்பட உள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரச எதிர்ப்பு அலையை எதிர்கொண்டு முன்னோக்கிச் செல்லக்கூடிய பலம் வாய்ந்த கட்சி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி எனவும் அதனால்தான் எதிர்வரும் காலங்களில் கட்சிகளை இணைப்பது தொடர்பான கலந்துரையாடல்கள் இடம்பெறுவதாகவும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உப தலைவர் பேராசிரியர் ரோஹன லக்ஷ்மன் பியதாச தெரிவித்துள்ளார்.

இன்று நடைபெறும் மத்திய குழு கூட்டத்தில் பல தீர்மானங்கள் எடுக்கப்பட உள்ளதாகவும், தற்போதுள்ள பிரச்சினைகளுக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்படும் என்றும் அவர் கூறினார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ரணிலின் குடியுரிமையை இரத்து செய்யுமாறு கோரிக்கை

1988-89 பயங்கரவாத காலத்தில் காணாமல் போனவர்களின் உறவினர்கள் குழு ஒன்று, சர்ச்சைக்குரிய படலந்த சம்பவம் குறித்து விசாரிக்க புதிய...

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவுக்கு நாடாளுமன்றில் தடை விதிப்பு

எதிர்வரும் 8 அமர்வு நாட்களில் நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவினால் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படும், கருத்துகள் மற்றும் உரைகளை நேரடியாக...

பாராளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பம் (நேரலை)

சபாநாயகர் தலைமையில் பாராளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பமாகியுள்ளன. இதன் நேரடி ஔிபரப்பை கீழே காணலாம்,