follow the truth

follow the truth

March, 22, 2025
HomeTOP1இறக்குமதி செய்யப்பட்ட உருளைக்கிழங்கு வரி 04 மாதங்களுக்கு நீடிக்கப்படும்

இறக்குமதி செய்யப்பட்ட உருளைக்கிழங்கு வரி 04 மாதங்களுக்கு நீடிக்கப்படும்

Published on

இறக்குமதி செய்யப்படும் உருளைக்கிழங்கு மீது விதிக்கப்பட்டுள்ள விசேட வர்த்தக வரியை மேலும் 04 மாதங்களுக்கு நீடிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இதன்படி, இறக்குமதி செய்யப்படும் உருளைக்கிழங்குக்கான விசேட சரக்கு வரி எதிர்வரும் செப்டெம்பர் 8ஆம் திகதி முதல் அடுத்த 4 மாதங்களுக்கு அமுல்படுத்தப்படவுள்ளது.

இறக்குமதி செய்யப்படும் உருளைக்கிழங்குக்கு 01 கிலோவிற்கு 50 ரூபா விசேட சரக்கு வரியை இந்த வருடம் மார்ச் மாதம் 8 ஆம் திகதி முதல் அமுல்படுத்துவதற்கு நிதி அமைச்சு நடவடிக்கை எடுத்திருந்தது.

குறித்த வரி 06 மாத காலத்திற்கு விதிக்கப்பட்டதுடன், மேலும் 04 மாதங்களுக்கு நீடிக்க நிதியமைச்சு தீர்மானித்துள்ளது.

இதன்படி, நிதியமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அதற்கான வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

முன்னதாக, இறக்குமதி செய்யப்படும் உருளைக்கிழங்கு ஒரு கிலோகிராம் ஒன்றிற்கு 20 ரூபா என்ற விசேட சரக்கு வரி விதிக்கப்பட்டிருந்த நிலையில், அதனை மார்ச் மாதம் முதல் உயர்த்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

சர்வஜன அதிகாரத்தின் கொழும்பு மேயர் வேட்பாளராக ஹசன் அலால்டீன்

சர்வஜன அதிகாரம் சார்பாக கொழும்பு மாநகர சபையின் மேயர் வேட்பாளராக ஹசன் அலால்டீன் நியமிக்கப்பட்டுள்ளார். ஹசன் அலால்டீன் முன்னதாக சர்வஜன...

இன்று நாட்டின் பல பகுதிகளில் கடும் மழைக்கு வாய்ப்பு

நாட்டின் மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல், வடக்கு மாகாணங்களிலும் அநுராதபுரம், காலி, மாத்தறை மாவட்டங்களிலும் பல இடங்களில் இன்றையதினம்...

கொழும்பு மேயர் வேட்பாளராக வைத்தியர் ருவைஸ் ஹனீபா

கொழும்பு மாநகர சபையின் மேயர் வேட்பாளராக ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பாக கலாநிதி வைத்தியர் ருவைஸ் ஹனிஃபா நியமிக்கப்பட்டுள்ளார். ருவேஸ்...