follow the truth

follow the truth

March, 14, 2025
HomeTOP1கீரி சம்பா அரிசிக்கு தட்டுப்பாடு

கீரி சம்பா அரிசிக்கு தட்டுப்பாடு

Published on

ஹட்டன் உள்ளிட்ட பெருந்தோட்ட நகரங்களில் கீரி சம்பா அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் உணவக உரிமையாளர்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

கீரி சம்பா அரிசிக்கு தட்டுப்பாடு நிலவி வருவதால், கீரி சம்பா அரிசியை இருப்பு வைத்துள்ள சில தொழிலதிபர்கள், கட்டுப்பாட்டு விலையான ரூ.260க்கு மேல், பல்வேறு விலையில், 300 முதல், 325 ரூபாய் வரை விற்பனை செய்வதாக, உணவக உரிமையாளர்கள் கூறுகின்றனர்.

நாடு, சிவப்பு, சம்பா அரிசி ஆலைகளின் உரிமையாளர்கள் அதிகபட்ச சில்லறை விலைக்கு அருகாமையில் மொத்த விலையில் அரிசியை வெளியிடுவதால் அரிசி விற்பனையில் அதிக சதவீத இலாபம் இல்லை என்று ஹட்டன் மற்றும் பிற தோட்டப் பகுதிகளில் அரிசி விற்கும் விற்பனையாளர்கள் கூறுகின்றனர்.

அரிசி ஆலை உரிமையாளர்கள் மிகக் குறைந்த அளவே கீரி சம்பா அரிசியை மொத்த விலையில் கிலோ 298-300 ரூபாய்க்கு சந்தைக்கு விடுவதால் சந்தையில் கீரி சம்பாவுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

மூதூர் இரட்டை கொலை – 15 வயது சிறுமி கைது

மூதூர் - தாஹாநகர் பகுதியில் இரண்டு பெண்கள் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், இருவரினதும் பேர்த்தியான 15 வயது சிறுமி...

எம்.பி பதவியை இராஜினாமா செய்தார் சாலி நளீம்

ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர் முஹம்மட் சாலி நழீம் தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்தவதாக...

ஜனாதிபதிக்கும் தொழில்முயற்சிகள் அபிவிருத்தி அமைச்சின் அதிகாரிகளுக்கும் இடையில் சந்திப்பு

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கும் கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சிகள் அபிவிருத்தி அமைச்சின் அதிகாரிகளுக்கும் இடையிலான சந்திப்பு இன்று(14) ஜனாதிபதி அலுவலகத்தில்...