மாகாணங்களுக்கு இடையிலான பொது போக்குவரத்து சேவைகள் நாளை(01) முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இதற்கமைய, மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்து நடவடிக்கைகளுக்காக 1,600 பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் பிரதி பொது முகாமையாளர் பண்டுக சுவர்ணஹங்ஸ தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில் மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்து நடவடிக்கைகளுக்காக இன்று (31) முதல் 50 சதவீதமான பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாகத் தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
இதேவேளை, வழமையான நேரங்களுக்கு அமைய நாளை (01) முதல் ரயில் சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக ரயில்வே திணைக்கள பொது முகாமையாளர் தம்மிக தஸநாயக்க தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும் நாளை (01) முதல் அலுவலக ரயில் சேவைகள் மாத்திரமே சேவையில் ஈடுபடும் எனவும் அவர் அறிவித்துள்ளார்.
தூரப் பிரதேசங்களுக்கான ரயில் சேவைகளை எதிர்வரும் 05ஆம் திகதி முதல் ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரித்துள்ளார்.