follow the truth

follow the truth

September, 24, 2024
Homeஉள்நாடுசீன உரக் கொடுக்கல் வாங்கல்களின் நிதி தொடர்பில் ஆராயுமாறு வங்கி ஊழியர் சங்கம் கோரிக்கை

சீன உரக் கொடுக்கல் வாங்கல்களின் நிதி தொடர்பில் ஆராயுமாறு வங்கி ஊழியர் சங்கம் கோரிக்கை

Published on

சீன உரக் கொடுக்கல் வாங்கல்களின் நிதி தொடர்பில் ஆராயுமாறு இலங்கை வங்கி ஊழியர் சங்கம் (CBEU) நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷவிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

CBEU அனுப்பிய கடிதத்தின் மூலம் இது தெரிவிக்கப்பட்டது. மேலும் அது பற்றிய விவரங்கள் ஊடக அறிக்கை மூலம் தெரிவிக்கப்பட்டன.

மேலும் பொது மக்கள் வங்கியின் மீதான நம்பிக்கையை இழக்க நேரிடும் எனவும் இது நிறுவனத்தின் நற்பெயருக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வங்கி தொடர்பில் ஊடகங்கள் ஊடாக தற்போது பரப்பப்படும் தேவையற்ற மற்றும் தவறான தகவல்கள் பரவுவதை தடுக்க நிதியமைச்சர் உடனடியாக தலையிடுமாறு கோரப்பட்டுள்ளது.

சீன அரசாங்கத்திற்கு நிதி வழங்கப்படாதது மக்கள் வங்கியின் தவறல்ல என்றும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கையிருப்பிலுள்ள எரிபொருள் குறித்து காஞ்சனா விஜேசேகர அறிவிப்பு

நாட்டில் உள்ள எரிபொருள் இருப்புக்கள் தொடர்பில் முன்னாள் மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர விளக்கமளித்துள்ளார். அவரது அதிகாரப்பூர்வ...

ஜனாதிபதியின் பிரத்தியேக செயலாளராக ஆனந்த விஜயபால நியமனம்

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவின் தனிப்பட்ட செயலாளராக கே. ஆனந்த விஜயபால நியமிக்கப்பட்டுள்ளார். அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில்...

பங்குச் சந்தை விலைக் குறியீடு உயர்ந்துள்ளது

ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்ட ஒரு நாளின் பின்னர், கொழும்பு பங்குச் சந்தையின் (CSE) அனைத்து பங்கு விலைச் சுட்டெண்...