ஸ்கொட்லாந்து − க்லாஸ்கோவிலில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகளின் காலநிலை மாற்றம் தொடர்பான மாநாட்டில் கலந்துக்கொள்வதற்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ நாட்டிலிருந்து புறப்பட்டு சென்றார்.
கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக இன்று அதிகாலை ஜனாதிபதி தலைமையிலான குழு நாட்டிலிருந்து புறப்பட்டு சென்றுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்தது.