மாகாணங்களுக்கிடையிலான பயணத்தடை எதிர்வரும் முதலாம் திகதி தளர்த்தப்பட்டதன் பின்னர், இடைநிறுத்தப்பட்டிருந்த மாகாணங்களுக்கு இடையிலான புகையிரத சேவைகள் மீள ஆரம்பிக்கப்படவுள்ளன.
ஒக்டோபர் 31ஆம் திகதி அதிகாலை 4.00 மணிக்குப் பின்னர் தற்போது நடைமுறையில் உள்ள மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடுகளை நீக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், புகையிரத சேவைகள் எதிர்வரும் முதலாம் திகதி முதல் மீள ஆரம்பிக்கப்படவுள்ளதாக ரயில் நிலையப் பொறுப்பதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.