follow the truth

follow the truth

April, 2, 2025
HomeTOP1வறட்சியின் உச்சம் - சுமார் 60,000 இற்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிப்பு

வறட்சியின் உச்சம் – சுமார் 60,000 இற்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிப்பு

Published on

நாடளாவிய ரீதியில் 15 மாவட்டங்களில் நிலவும் கடும் வரட்சியினால் கடும் குடிநீர் தட்டுப்பாட்டை எதிர்நோக்கும் குடும்பங்களின் எண்ணிக்கை அறுபதாயிரத்து தொள்ளாயிரத்து தொண்ணூறு (60900) ஆக அதிகரித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் சுதந்த ரணசிங்க தெரிவித்தார்.

இரத்தினபுரி, திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை, புத்தளம், குருநாகல், யாழ்ப்பாணம், மன்னார், முல்லைத்தீவு, வவுனியா, பதுளை, மொனராகலை, அம்பாந்தோட்டை, கம்பஹா மாத்தளை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்தவர்களே கடும் நீர்ப் பற்றாக்குறையை எதிர்நோக்கியுள்ளனர்.

அதிகளவான மக்கள் நீர் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டவர்கள் யாழ்.மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் மற்றும் அந்த மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் எண்ணிக்கை 21999 ஆகும். அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் தகவலின்படி, 70238 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தண்ணீர் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தொடர்ந்து குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருவதாக பணிப்பாளர் நாயகம் தெரிவித்தார்.

அதற்காக இருநூற்றுக்கும் மேற்பட்ட பவுசர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, காலை மற்றும் மாலை வேளைகளில் வாகனங்களை கழுவுவதை தவிர்க்குமாறும், நீரை கவனமாக பயன்படுத்துமாறும் மேஜர் ஜெனரல் சுதந்த ரணசிங்க மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

பாதி திறந்த குழாய்களில் தண்ணீர் எடுப்பதை ஊக்குவிப்பதும், வாஷிங் மெஷின் மூலம் கழுவுவதை முடிந்தவரை குறைப்பதும் முக்கியம் என்றார்.

தண்ணீர் குழாய்களில் இருந்து குளிப்பதை குறைந்த நேரத்தை செலவழித்து செய்ய வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

இதேவேளை, வனவிலங்குகள் தண்ணீர் இன்றி கிராமங்களில் நடமாடுவதால், மக்கள் அவதானமாக இருக்க வேண்டும் எனத் தெரிவித்த மேஜர் ஜெனரல் சுதந்த ரணசிங்க, குறிப்பாக பல பிரதேசங்களில் ஏனைய விலங்குகளை விட குரங்குகள் அதிக வன்முறைச் செயற்பாடுகளை வெளிப்படுத்துவதாகவும் தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜூலையில் பேருந்து கட்டணம் உயரும் சாத்தியம்

எதிர்வரும் ஜுலை மாதத்தில் கண்டிப்பாக பேருந்து கட்டணங்கள் கணிசமாக அதிகரிக்கப்படும் என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின்...

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சட்டவிரோத கைது நடவடிக்கைகளைக் கண்டிக்கிறது

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா எந்தவொரு நபரும் சட்டப்பூர்வமான வழியில், ஜனநாயக முறையில் தமது கவலைகளையும் கரிசனைகளையும் வெளிப்படுத்துவதற்காக...

பண்டிகை காலத்தை முன்னிட்டு விசேட பேருந்து சேவை

தமிழ், சிங்கள புத்தாண்டுக்காக தங்கள் ஊர்களுக்கு செல்லும் மக்களுக்கு போக்குவரத்து வசதிகளை வழங்குவதற்காக விசேட பேருந்து சேவையை இயக்க...