முல்லேரியா – மீகஹவத்தையில் வீடொன்றுக்குள் புகுந்து துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்ட பிரதான சந்தேக நபர் தொடர்பில் தகவல் வழங்கும் நபருக்கு 25 இலட்சம் ரூபா வழங்குவதாக பொலிஸ் திணைக்களம் இன்று(27) அறிவித்துள்ளது.
மீகஹவத்தையில் பொலிஸ் சீருடை அணிந்திருந்த இனந்தெரியாத நபரால் நேற்றைய தினம் (26) வீடொன்றுக்குள் புகுந்த இருவர் அங்கிருந்தோர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டனர்.
இந்த சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன் மேலும் ஒருவர் படுகாயங்களுடன் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருகிறார்.
இந்நிலையில், பிரதான சந்தேக நபர் குறித்த தகவல்களை வெளியிட்டுள்ள பொலிஸ் திணைக்களம் அவரை கண்டுபிடிக்க பொதுமக்களின் உதவியை பொலிஸார் நாடியுள்ளனர்.
பொன்னம்பெரும ஆராச்சிகே தொன் தனுஷ் புத்திக நொஹான் ஜிலே என்ற பெயருடைய 30 வயதான நபர் தொடர்பில் தகவல் தெரிந்தோர் 071 859 1727, 077 7370360, 071 8592279 ஆகிய இலக்கங்களுடன் பொலிஸ் குற்றத்தடுப்புப் பிரிவு பணிப்பாளர், மேல்மாகாண தெற்கு குற்றத்தடுப்புப் பிரிவு பணிப்பாளரை தொடர்புகொள்ளுமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்