follow the truth

follow the truth

September, 20, 2024
Homeபொலிட்டிக்கல் மேனியாமிஹிந்தலை மின்சார நாடகத்தில் ஜோகரான நடிகரும் துணை நடிகரும்

மிஹிந்தலை மின்சார நாடகத்தில் ஜோகரான நடிகரும் துணை நடிகரும்

Published on

மிஹிந்தலையின் மின்சாரக் கட்டண நாடகத் திரைக்கதையை இன்னும் கொஞ்சம் புத்திசாலித்தனமாக எழுதியிருந்தால் அரச நாடக விழாவில் கூட விருதுகளை வென்றிருக்கும் என ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்.

மிஹிந்தலை விகாரையின் மின்சாரத்தினை வெட்டியதாக தேரர் கூறியவுடன், நாடகத்தின் அடுத்த காட்சி நடிகர் சஜித் பிரேமதாச உடனடியாக முன்னோக்கி பாய்ந்து மின்சாரக் கட்டணத்தை செலுத்தும் காட்சி, பார்வையாளர்கள் நினைத்தபடியே அனைத்தும் நடந்ததாக ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் குறிப்பிட்டார்.

ஒரு நல்ல நாடகத்தின் அடுத்த காட்சியை பார்வையாளர்கள் ஆர்வத்துடன் பார்க்க வேண்டும் என்றும், ஆனால் “மிஹிந்தலை வெளிச்சம்” நாடகத்தில் நடிகரும், துணை நடிகருமான சஜித் பிரேமதாசவும் வழமை போல் நன்றாக இம்முறையும் தலை குளித்துத்துக் கொண்டுள்ளார் என ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் தெரிவித்துள்ளார்.

மிஹிந்தலை விகாரையை தரிசிக்க வரும் அப்பாவி மற்றும் வறிய பங்களிப்பாளர்களிடம் விகாரைக்கு மின் கட்டணத்தினை செலுத்தவும், பற்றுச்சீட்டு விற்ற பணத்தை என்ன செய்தார்கள் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்.

பௌத்த மதத்தை நிமிரச் செய்த மிஹிந்தலை மகானின் பெயரை மந்தமான அரசியல் நாடகங்களில் பயன்படுத்த வேண்டாம் என தாம் பணிவுடன் கேட்டுக்கொள்கின்றேன் என ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் மேலும் தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

துமிந்த சில்வாவின் விடுதலை பேச்சுவார்த்தை தோல்வி – பசில் நாட்டை விட்டு வெளியேறினார்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் தேசிய அமைப்பாளரும் முன்னாள் அமைச்சருமான பசில் ராஜபக்ஷ நாட்டை விட்டு வெளியேறியுள்ளார். இலங்கையின் பிரபல...

நோயிலிருந்து மீண்டு வரும் நிலையில் மருத்துவர்களை மாற்றப் போகிறீர்களா?

இந்த நாட்டு மக்களிடம் எந்த பொய்யை வேண்டுமானாலும் கூறி அவர்களின் மனதைவெல்ல முடியும் என ஜே.வி.பி நினைக்கிறதாக அமைச்சர்...

10 வருடங்களில் மீட்க முடியாது என்று சொல்லப்பட்ட நாட்டை இரண்டே ஆண்டுகளில் மீட்டெடுத்தார்

எனது 40 வருட அரசியலில் நான் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு வாக்களிக்கவில்லை, வாக்களிப்பேன் என்ற நம்பிக்கையும் எனக்கு இருக்கவில்லை...