தற்காலிகமாக மூடப்பட்டிருந்த கட்டுநாயக்க விமான நிலையத்துடன் இணைந்த PCR மருத்துவ ஆய்வுகூடம் பயணிகளுக்காக மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு PCR பரிசோதனையொன்றுக்காக 40 அமெரிக்க டொலர் (இலங்கை மதிப்பில் சுமார் 8,000) கட்டணம் அறவிடப்படுவதுடன், பரிசோதனை முடிவுகளை மூன்று மணித்தியாலங்களுக்குள் வழங்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இன்று (27) அதிகாலை 2.15 மணிக்கு கட்டாரிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வருகை தந்த பயணிகளுக்கு முதல்தடவையாக பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
ஒரு டோஸ் தடுப்பூசியை பெற்றுக் கொண்டு இலங்கைக்கு வரும் பயணிகளுக்கும் முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட இலங்கையிலிருந்து புறப்படுபவர்களுக்கும் இங்கு PCR பரிசோதனைகள் செய்யப்படலாம் என மருத்துவ ஆய்வகத்தின் மேலாளர் சுமுது சரசிஜா தெரிவித்தார்.