follow the truth

follow the truth

September, 23, 2024
Homeஉள்நாடுஜனாதிபதி செயலணியில் இன சமத்துவம் இல்லை - கரு ஜயசூரிய

ஜனாதிபதி செயலணியில் இன சமத்துவம் இல்லை – கரு ஜயசூரிய

Published on

ஒரே நாடு, ஒரே சட்டம் என்பதற்கான ஜனாதிபதி செயலணியில் சமத்துவம் பேணபடவில்லை ஏனைய இனத்தைச் சேர்ந்தவர்களுக்கும் பெண்களுக்கும் முக்கியத்துவம் வழங்கப்படவில்லை  என முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய சுட்டிக்காட்டியுள்ளாா்.

ஆகவே, இந்த குழுவின் பன்முகத்தன்மையைப் பேணுவதற்காக மக்கள் கருத்தைப் பெற்றுக்கொள்ள வேண்டியதும் அவசியமென அவர் வலியுறுத்தியுள்ளாா்.

இதுதொடர்பில் அவர் விளக்கமளித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவிலிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளாா்.

ஒரே நாடு, ஒரே சட்டம் என்பதற்கான ஜனாதிபதி செயலணிக்கான வர்த்தமானி அறிக்கைக்கு அமைவாக , நபர்கள் சமமான நிலையில் மதிக்கப்படுகிறாா்கள் என்பதை அந்த குழுவே முதலில் உறுதி செய்ய வேண்டும்.

ஆனால், இந்தக் குழுவில் சகல இன பிரதிநிதிகளைச் சேர்ந்த பிரதிநிதிகளோ, அல்லது பெண்களோ உள்வாங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஆகவே, இதன் உள்ளக பன்முகத்தன்மையைப் பாதுகாப்பதற்காகப் பொதுமக்களின் கருத்துக்களைப் பெற்றுக்கொள்ள வேண்டியது அவசியமாகும் என்றும் கரு ஜயசூரிய குறிப்பிட்டுள்ளாா்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜனாதிபதியின் செயலாளராக நந்திக்க சனத் குமாநாயக்க நியமனம்

ஜனாதிபதியின் செயலாளராக கலாநிதி நந்திக்க சனத் குமாநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார். அரசாங்கத் தகவல் திணைக்களம் இதனைத் தெரிவித்துள்ளது.

முப்படைத் தளபதிகளுடன் ஜனாதிபதி அநுர கலந்துரையாடல்

நாட்டில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவது தொடர்பில் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க முப்படைத் தளபதிகளுடன் கலந்துரையாடியுள்ளார்.

அநுரவின் பாராளுமன்ற இடத்திற்கு லக்ஷ்மன் நிபுன ஆராச்சி

இலங்கையின் 9வது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக அநுரகுமார திசாநாயக்க தெரிவானதைத் தொடர்ந்து, வெற்றிடமாகியுள்ள அவரது பாராளுமன்ற உறுப்பினர்...