follow the truth

follow the truth

September, 17, 2024
HomeTOP1நாட்டில் புற்றுநோய் பரவல் அதிகரிப்பு

நாட்டில் புற்றுநோய் பரவல் அதிகரிப்பு

Published on

தற்போது நாட்டில் புற்றுநோயால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக தேசிய புற்றுநோய் கட்டுப்பாட்டு திட்டம் தெரிவித்துள்ளது.

அதன் பணிப்பாளரும், சமூக பல் மருத்துவ நிபுணருமான இஷானி பெர்னாண்டோ, இலங்கையில் ஏற்படும் மரணங்களுக்கு இரண்டாவது பொதுவான காரணியாக புற்றுநோய் உள்ளது.

சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட விசேட வைத்தியர் இஷானி பெர்னாண்டோ அந்தக் கருத்துக்களை வெளியிட்டார்.

“இலங்கையில் மரணத்திற்கு இரண்டாவது முக்கிய காரணியாக புற்றுநோய் உள்ளது. பதிவாளர் நாயகம் திணைக்களத்தின் அறிக்கையின்படி 2019 இல் புற்றுநோயால் 15,599 பேர் உயிரிழந்துள்ளனர்.

2020 இல் 37,649 புதிய நோயாளர்கள் கண்டறியப்பட்டுள்ளனர். அதே நேரத்தில், புற்றுநோயின் அதிகரிப்பையும் நாம் காண்கிறோம். ஆண்களிடையே வாய் புற்றுநோய் மிகவும் பொதுவான புற்றுநோயாகும்.

எனக்கு தெரிந்தவரை புகையிலை பயன்பாட்டை குறைக்க போதிய திட்டங்கள் இல்லை. பெரும்பாலான வளர்ந்த நாடுகளில் புரோஸ்டேட் புற்றுநோய் உள்ளது.

இது வயதுக்கு ஏற்ப உருவாகிறது. அதனால் மரணிக்காது. நம் நாட்டில் புகையிலைக்கு எதிராக அதிக வேலைத்திட்டங்களையும் எதிர்ப்பு நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும்…”

spot_img
spot_img
spot_img

LATEST NEWS

MORE ARTICLES

வளமான நாடா அல்லது வரிசை யுகமா என்பதை இந்த ஜனாதிபதித் தேர்தலில் மக்கள் தீர்மானிக்க வேண்டும்

வளமான மற்றும் நிலையான பொருளாதாரம் கொண்ட நாட்டைக் கட்டியெழுப்ப வேண்டுமா அல்லது நாட்டை மீண்டும் வரிசை யுகத்திற்கு தள்ளுவதா...

தேர்தல் முறைப்பாடுகள் அதிகரிப்பு

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் கடந்த 24 மணித்தியாலங்களில் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு 184 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. இதன்படி ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாகக்...

இலங்கை இன்னும் பொருளாதார ஆபத்திலிருந்து முழுமையாக மீளவில்லை – தேர்தலில் மக்கள் தீர்மானிக்க வேண்டும்

இலங்கை இதுவரை பயணித்த பாதையில் பல முன்னேற்றங்களை அடைந்துள்ளது. ஆனாலும் நாடு இன்னும் பொருளாதார ஆபத்தில் இருந்து மீளவில்லை...