சமூகப் பாதுகாப்புத் திட்டத்தைச் செயல்படுத்த உலக வங்கி ஒப்புக்கொண்ட 200 மில்லியன் அமெரிக்க டாலர் தொகையைப் பெறுவதற்கான ஒப்பந்தத்துக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
வறியவர்களை இலக்காகக் கொண்ட இத்திட்டத்தின் கீழ் வறியவர்களுக்கு அதிக நன்மைகளை வழங்கும் அஸ்வசும சமூக பாதுகாப்பு திட்டத்திற்கு உலக வங்கி அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அமைச்சரவை தீர்மானத்தை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.