கடந்த 8 முதல் 9 நாட்களாக தினசரி கொவிட் மரணங்கள் 20 க்கும் கீழே பதிவாகி இருந்த நிலையில், நாட்டில் நேற்று 29 கொவிட் மரணங்கள் பதிவு செய்யப்பட்டதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளமையே அதிக உயிரிழப்புக்கு காரணமா என்பது தொடர்பில் சுகாதார அமைச்சு ஆராய்ந்து வருவதாக சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் பதிவான கொவிட் மரணங்கள் எண்ணிக்கை கணிசமான அளவு அதிகரித்துள்ளதாகவும் இது தொடர்பில் பொதுமக்கள் அவதானமாக இருக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.
எந்தவொரு சந்தர்ப்பத்திலும் கொவிட் மரண எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
எனினும், கடந்த சில தினங்களாக இறப்புகள் சற்று அதிகரித்து வருகின்றமை சுகாதார அதிகாரிகளிடையே சில கவலைகளை எழுப்பியுள்ளது.