கொவிட் தடுப்பூசி அட்டையை கட்டாயமாக்குவது தொடர்பில் ஆராயுமாறு சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவிடம் சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க கோரிக்கை விடுத்துள்ளார்.
இதன்போது வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கும் கொவிட் தடுப்பூசி அட்டை கட்டாயமாக்கப்படும் என அவர் சுட்டிக்காட்டினார்.
சுற்றுலாத்துறையின் எதிர்காலம் தொடர்பான கலந்துரையாடலின் போதே இந்த கோரிக்கை விடுக்கப்பட்டது.
சுகாதார வழிகாட்டுதல்களுக்கு அமைய நாட்டில் வெளிநாட்டு மாநாடுகள் மற்றும் நிகழ்வுகளை நடத்துவதற்கான சாத்தியக்கூறுகள் தொடர்பில் ஆராயப்பட்டு வருவதாகவும் அதிகளவான சுற்றுலாப் பயணிகளின் பங்கேற்புடன் அடுத்த வருடம் நாட்டில் பல நிகழ்வுகளை நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் ரணதுங்க தெரிவித்துள்ளார்.