இலங்கையில் பணிபுரியும் 3,300 சீன பிரஜைகளுக்கு தற்பொது வரையில் சினோபார்ம் தடுப்பூசியின் மூன்றாவது டோஸ் செலுத்தப்பட்டுள்ளதாக இலங்கைக்கான சீன தூதரகம் தெரிவித்துள்ளது.
கடந்த 22 ஆம் திகதி முதல் 25 வரையான காலப்பகுதியில் இவ்வாறு சீன நாட்டவர்களுக்கு மூன்றாவது டோஸ் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கொழும்பு, கண்டி, ஹம்பாந்தோட்டை, புத்தளம் மற்றும் தம்புள்ளை ஆகிய பகுதிகளில் பணிபுரியும் சீன பிரஜைகளுக்கே இவ்வாறு தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது.
இரண்டு டோஸ் சினோபார்ம் தடுப்பூசி பெற்று, ஆறு மாதங்களுக்குப் பிறகு மூன்றாவது டோஸ் தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளதாக சீனத் தூதரகம் தெரிவித்துள்ளது.