வரி அதிகரிப்புக்கு எதிராக கென்ய எதிர்ப்பாளர்கள் நடத்திய போராட்டம் வன்முறையாக மாறியதால் தலைநகர் நைரோபி மற்றும் மொம்பாசாவில் உள்ள பாடசாலைகளை மூடுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கடந்த மாதம், கென்யாவின் எதிர்க்கட்சியினர், ஜனாதிபதி வில்லியம் ரூட்டோவின் அரசாங்கம் வரி உயர்வை அறிமுகப்படுத்திய பின்னர், உயர்ந்து வரும் வாழ்க்கைச் செலவுக்கு எதிராக பல போராட்டங்களை ஏற்பாடு செய்தது, அவற்றில் பல பொலிஸ் தலையீட்டிற்குப் பிறகு அது வன்முறையாக மாறியது.
போராட்டக்காரர்கள் மீது கண்ணீர் புகை குண்டுகள் வீசப்பட்டதை அடுத்து காவல்துறை அதிகாரிகள் தாக்கப்பட்டனர், பதிலுக்கு காவல்துறை நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 10 போராட்டக்காரர்கள் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
மனித உரிமை அமைப்புகள், காவல்துறையின் அதிகப்படியான பலத்தைப் பயன்படுத்துவதாக அரசாங்கத்தை விமர்சித்துள்ளன. நைரோபியில் போராட்டக்காரர்கள் மீது கண்ணீர் புகை குண்டு வீசி அருகில் உள்ள பாடசாலையை தாக்கியதில் 50 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தப் போராட்டங்கள் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் எனக் கூறி, கென்யாவின் காவல்துறைத் தலைவர், நாடு முழுவதும் கலகத் தடுப்பு அதிகாரிகளை நிலைநிறுத்த நடவடிக்கை எடுத்துள்ள நிலையில், நிலைமை மேலும் தீவிரமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.