follow the truth

follow the truth

September, 20, 2024
HomeTOP1நாட்டில் பயன்படுத்தப்படும் மருந்துகள் பற்றிய விசேட அறிவித்தல் 

நாட்டில் பயன்படுத்தப்படும் மருந்துகள் பற்றிய விசேட அறிவித்தல் 

Published on

இந்திய கடன் திட்டத்தின் கீழ் இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட மருந்துகள் தரமற்றவை என்ற குற்றச்சாட்டை நிராகரிப்பதாக சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் வைத்தியர் சமன் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

குறித்த கடன் திட்டத்தின் கீழ் 679 மருந்துகளுக்கான கொள்வனவுக்காக அறிவித்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும், அதில் 278 மருந்துகள் தற்போது நாட்டின் சுகாதார அமைப்பில் பயன்படுத்தப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

சுகாதார அமைச்சில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அதன் மேலதிக செயலாளர் வைத்தியர் சமன் ரத்நாயக்க, பயன்படுத்தப்படும் மருந்துகள் தொடர்பில் இதுவரை எவ்வித பிரச்சினையும் ஏற்படவில்லை எனவும் தெரிவித்திருந்தார்.

எவ்வாறாயினும், கொழும்பு தேசிய கண் வைத்தியசாலை உட்பட பல வைத்தியசாலைகளில் பிரச்சினைகளை ஏற்படுத்திய மருந்து உற்பத்தி நிறுவனத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக வைத்தியர் சமன் ரத்நாயக்க மேலும் சுட்டிக்காட்டியிருந்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள் கசிவு – மூவர் பணி நீக்கம்

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாளை புகைப்படம் எடுத்து வட்ஸ்அப் மூலம் பகிர்ந்த சம்பவம் தொடர்பில் அனுராதபுரம் ரத்மலே...

கொழும்பில் காச நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

மேல் மாகாணத்தில் காச நோயாளர்களின் எண்ணிக்கை 46 சதவீதமாக அதிகரித்துள்ளதாக காசநோய் கட்டுப்பாடு மற்றும் மார்பு நோய்களுக்கான தேசிய...

ரயில் சேவைகளில் மாற்றம் இல்லை

ஜனாதிபதி தேர்தல் வாக்கெடுப்பு இடம்பெறும் நாளைய தினம் ரயில் சேவைகள் வழமைப் போன்று இடம்பெறுமென ரயில்வே பிரதி பொதுமுகாமையாளர்...