follow the truth

follow the truth

September, 21, 2024
HomeTOP1ஜனாதிபதியின் இந்திய விஜயம் நாளை

ஜனாதிபதியின் இந்திய விஜயம் நாளை

Published on

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பின்படி, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாளை(20) இந்தியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்ள உள்ளார்.

இந்த ஆண்டு இரு நாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகள் ஸ்தாபிக்கப்பட்டு 75 ஆண்டுகள் நிறைவடைந்ததன் பின்னணியில் இந்த விஜயம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த விஜயத்தின் போது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்முவை சந்திக்கவுள்ளார். அவர் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பிற இந்திய உயரதிகாரிகளை சந்தித்து பரஸ்பர நலன் சார்ந்த பல விஷயங்கள் குறித்து இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.

இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால இருதரப்பு உறவுகளை மேலும் மேம்படுத்தவும் வலுப்படுத்தவும் இந்தப் பயணம் உதவும் என நம்பப்படுகின்றது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜனாதிபதி தேர்தல் – தபால்மூல வாக்குகளை எண்ணும் பணி ஆரம்பம்

2024 ஜனாதிபதி தேர்தலுக்கான தற்போது மாவட்ட ரீதியாக தபால்மூல வாக்குகளை எண்ணும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட தெரிவித்தாட்சி அலுவலர்கள்...

2024 ஜனாதிபதி தேர்தல் – 4 மணிவரை பதிவான வாக்குப்பதிவு

இலங்கையின் 9வது ஜனாதிபதியை தெரிவு செய்வதற்காக இன்று இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவடைந்தது. இதன்படி, மாவட்ட ரீதியாக அளிக்கப்பட்ட...

ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்களிப்பு காலம் நிறைவு

2024 ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்களிப்பு காலம் உத்தியோகபூர்வமாக நிறைவடைந்துள்ளது. இதேவேளை ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்கெடுப்பில் பிற்பகல் 3 மணிவரையிலான நிலவரத்தின்படி,...