follow the truth

follow the truth

September, 20, 2024
HomeTOP1அலி சப்ரி ரஹீம் மீதான சுங்க விசாரணை அறிக்கை சபாநாயகரிடம்

அலி சப்ரி ரஹீம் மீதான சுங்க விசாரணை அறிக்கை சபாநாயகரிடம்

Published on

பாராளுமன்ற சிறப்புரிமைகளை பயன்படுத்தி சட்டவிரோதமான முறையில் தங்கத்தை இலங்கைக்கு கொண்டு வந்த போது கைது செய்யப்பட்ட புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் தொடர்பான சுங்க விசாரணை அறிக்கையை சபாநாயகர் இன்று (18) சமர்ப்பிக்க உள்ளார்.

நேற்றைய தினம் இடம்பெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்திலும் இது தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீமுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உள்ளிட்ட 30 பேர் கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு அண்மையில் சபாநாயகரிடம் தீர்மானம் ஒன்றை கையளித்துள்ளனர்.

பாராளுமன்றம் இன்று காலை 9.30 மணிக்கு சபாநாயகர் தலைமையில் கூடவுள்ளது.

உள்ளூராட்சி மன்ற வாக்கெடுப்பை அழைப்பதில் முன்னாள் தேர்தல்கள் ஆணைக்குழு பாராளுமன்ற உறுப்பினர்களின் சிறப்புரிமைகளை மீறியதா என்பதை கண்டறிய விசேட பாராளுமன்ற குழுவொன்றை நியமிக்கும் யோசனையை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன இன்று பாராளுமன்றத்தில் முன்வைக்கவுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

வாக்கு பெட்டிகள், வாக்குச் சீட்டுகள் விநியோகிக்கும் பணிகள் நாளை ஆரம்பம்

வாக்கு பெட்டிகள், வாக்குச் சீட்டு உள்ளிட்ட தேர்தலுக்கான சகல ஆவணங்களையும் விநியோகிக்கும் பணிகள் நாளை காலை முதல் ஆரம்பிக்கப்படும்...

உத்தியோகபூர்வமற்ற முடிவுகளை வெளியிடுவதை தவிர்க்குமாறு கோரிக்கை

ஜனாதிபதி தேர்தலின் உத்தியோகபூர்வ முடிவுகள் வெளியாகும் வரை உத்தியோகபூர்வமற்ற முடிவுகளை வெளியிடுவதை தவிர்க்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆனந்த...

ஜனாதிபதித் தேர்தல் – பாதுகாப்பிற்காக முப்படைகளும் இணக்கம்

ஜனாதிபதித் தேர்தலின் போது அமுல்படுத்தப்பட வேண்டிய இறுதி பாதுகாப்பு வேலைத்திட்டம் பொலிஸ்மா அதிபர்களுக்கு இன்று (19) வழங்கப்பட்டதாக பொது...